பஞ்சதேவதைகள்

nilam

kaatru

neruppu

neer

agayam


(பெரிதாக பார்க்க, படங்களை கொஞ்சம் கிள்ளவும்).

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

ஸ்ரீயாகிய நான் 3 சோடி போட்டுக்குவோமா சோடி

ஸ்ரீயாகிய நான் 1

ஸ்ரீயாகிய நான் 2

எப்படியோ ஒரு வழியா +2 பரிச்சை முடிச்சிட்டேன். அப்புறம் என்டரன்ஸ்னு ஒன்னு எழுதனும்னு சொன்னாங்க. நமக்கு தான் பரிச்சை பயமே இல்லையே (ரிசல்ட் பயம் மட்டும் தான்) சரி கழுதை எழுதிட்டா போச்சுனு ரெடியானேன். என் அம்மாவுக்கு பையன் மெட்ராஸ்ல 'எக்ஸல்'ல படிச்சா பெரிய ஆளா வருவானு தோனிடுச்சு, அடுத்த வாரமே எக்ஸல் விஜயம். சும்மா சொல்ல கூடாதுங்க பெத்தவங்க எது பண்ணாலும் சரியா தான் இருக்கும். அட அட அட என்னா ஃபிகருங்க? போய் இறங்குனதுல இருந்து சைட் அடிக்க ஆரம்பிச்சது தான். நானா எதோ படிச்சிருந்தா கூட நல்ல மார்க் வாங்கி இருந்திருப்பேன் அங்க போனதனால ஊரை தான் சுத்தினேன. அப்புறம் கொஞ்சம் பயம் வந்து கோச்சிங் முடியிரத்துக்கு முன்னாடியே பஸ் ஏறிட்டேன். ஏதோ படிச்சு ஒரு காலேஜ்ல சீட்ட போட்டுட்டேன். தெய்வம்னு ஒன்னு இருக்குங்க அங்க போனாலுமா என்ன மாதிரியே ஆளுங்க இருப்பானுங்க?

ஒரு குருப்பா சேந்தோம் நான், குவா (குழந்தை மாதிரி), குடிகாரன் (நானும் தான் ஆனா அவனை செல்லமா அப்டி தான் சொல்லுவோம்), காட்டான் (கொஞ்சம் கோவக்காரன்), கரடி குட்டி (அவன் மூஞ்சி தவிர எல்லா இடத்துலயும் முடிங்க அதான், இன்னொருத்தன் இருக்கான் 'கரடி மாமா'னு அவனுக்கு கண்ணை தவிர எல்லா இடத்துலயும் முடி. சோ கன்பீஸ் ஆயிடாதீங்க). இன்னும் நிறைய பேர் இருக்கானுங்க லிஸ்டுல ஆனா நாங்க தான் முதல்ல ஒன்னு கூடுனோம். 5 பேரும் சேந்து என்ன அணுகுண்டா கண்டுபிக்க போறோம்? குட்டி செவுரா தான் ஆனோம். அதுலயும் ஒரு அழகு எங்களோட வார்டன், மனுசன் 8 மணிக்கு தான் எழுந்திருப்பாரு. முதல் நாள் காலேஜ் முடிஞ்சி எல்லாம் ஆஜர் ஆனோம். நான் சுவத்த பாத்து உக்காந்துகிட்டு கதை பேச ஆரம்பிச்சேன். ஒரு உணர்ச்சிவசத்துல "டேய் அவன் வார்டனாடா? 8.30 மணிக்கு என் கூட தான் வந்து பல் துளக்குறான். அவனுக்கு கீழ படிக்கிறவன் எவனாவது உருப்புடுவானா?"னு ஒரு ஸ்மால் கொஸ்டீன் தான் பண்ணேன் பின்னாடி வார்டன் நிக்கிறது தெரியாம. அது என்ன ரகசியமோ எப்பவுமே நான் மட்டும் தான் மாட்டுவேன். அவர் கூப்பிட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார் அதுல இருந்து ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் காலீல சியர்ஸ் சொல்லி தான் பல்லு துளக்குவோம். சேந்த முதல் நாளே டெளசர் (ஷார்ஸ்) போட கூடாது லுங்கி தான் கட்டணும்னு சொல்லிட்டானுங்க. எனக்கு அது பழக்கம் இல்லை சரி ரூம்ல இருக்கும் போது டெளசர்ல இருக்கலாம்னு நானும் மாட்டுனேன். கரண்ட்டு கட்டாயிடுச்சு வெளியில பாராபட் சுவத்துல உக்காந்திருந்தேன். இருட்டுல அக்கவுன்டன்ட் வந்ததை கவனிக்கலை. சுவத்துல அதுவும் டெளசர் போட்டுகிட்டு உக்காந்துகினு இருக்கியா உனக்கு எவ்ளோ எஸ்.கே டானு சொல்லி உக்காந்த இடத்துலயே அடிச்சாங்க (சுவத்துல இல்லைங்க சு... மறுபடியும் சென்சார் ப்ராப்ளம்). இப்படி தான் முதல் நாள் காலேஜுல போச்சு.

அந்த வார்டன் கிளம்பி போக வந்து சேந்தார் நம்ம புது வார்டன் - ஹீரோ "அல்லக்கை". அவன் சரியான் குடாக்குங்க. இஞ்சி தின்ன குரங்குனு கேள்வி பட்டிருப்பீங்க ஆனா அவன் இஞ்சி தின்ன குரங்குக்கு பேதி ஆனா மாதிரி இருப்பான். என்னாடா இவன் மரியாதை இல்லாம பேசுறானேனு தப்பா பீல் பண்ணாதீங்க அவன் ஒரு சில்லரை பையன்ங்க எங்க கிட்டயே புடிங்கி தின்னுவான். சரியான கிறுக்கன் எவ்ளோ ஓட்டுனாலும் தாங்குவான் ரொம்ப நல்லவன். ஒரு வருஷம் முழுக்க ஓட்டுனோம். அதுல சில மறக்க முடியாத ஓட்டல்கள் இங்கே:

1. பசங்க ஒரு தடவை அவன் ரூம்ல கதவு வழியா கொஞ்சம் தண்ணி ஊத்திட்டானுங்க. அப்புறம் கதவு தட்டினாங்க அவன் அந்த தண்ணியில வந்து நின்னான். "டேய் என்னடா ஈரமா இருக்கு தண்ணியா?"னு கேட்க. எல்லாம் சேந்து "அய்யய்யோ சார் தண்ணி இல்லை எவனோ "உஸ்கா" (அதாங்க ;) சென்சாருக்காக வேற ஸ்பெல்லிங்) போயிட்டான்"னு சொல்லிடானுங்க. பாவம் மூஞ்சிய பாக்கணுமே நொண்டி அடிச்சிகிட்டே ஓடுனான் பாத்ரூமுக்கு.

2. ஒரு தடவை உள்ள வைச்சு பூட்டிட்டானுங்க (அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா). இந்த மேனேஜ்மன்டுனு இருப்பானுங்க இல்ல அதுங்க எல்லாம் சேந்து பூட்டு போடுறா மாதிரி இருந்தா தானடா உள்ள வைச்சு பூட்டுறீங்கனு சொல்லி அதை கதவோட இருக்க லாக்கா மாத்திட்டானுங்க (அடடா இன்னாமா யோசனை பாத்தீங்களா மூளைய ரொம்ப சொறிஞ்சானுங்க போல). நாங்க தான் இன்சினியர் ஆச்சே ரொம்ப யோசிக்கலை அழகா அவன் உள்ள இருக்கும் போது அந்த சாவி ஓட்டையில பபுள் கம் வெச்சி அடைச்சுட்டானுங்க. அப்புறம் எப்டி வந்தானு தெரியல பாவம்.

3. அவன் ரூம் கதவுல போய் பெருசா "அல்லக்கை" அப்டினு எழுதிட்டானுங்க. அவன் என் கிட்ட வந்து "டேய் அல்லக்கைனா என்னடா"னு கேட்க நான் எவ்ளோ கேவலமா சொல்ல முடியுமோ அவ்ளோ கேவலமா எக்ஸ்ப்லெயின் பண்ணேன். கொஞ்சம் சோகமா ஆயிட்டாரு. "என் கதவுல யாரோ அப்டி எழுதிட்டானுங்க"னு சொல்லி பீல் பண்ணாரு. நான் "நீங்க என்ன சார் பண்ணீங்க"னு கேட்டேன். சிம்பிளா "அழிச்சிட்டேன்"னு மனுஷன் பதில் சொல்லிட்டாரு. "அதை எப்டி அழிச்சீங்க? அது பால் பாயிண்ட் பேனாவாச்சே!"னு சொல்லி தொலைக்க. "டேய் நீ தானா?"னு என் மேல பாய ஆரம்பிச்சுட்டார். கேணை வழக்கம் போல பொய் சொன்னதை நம்பிட்டான்.

இன்னும் நிறைய இருக்குங்க அவனை பத்தி ஆனா ரொம்ப மொக்கை போட்டுட்டேன்னு நினைக்குறேன் இப்போதைக்கு அப்பீட் ஆயிக்கிறேன். பசங்க கூட கொஞ்சம் டிஸ்கிஸ் பண்ணிட்டு அப்புறம் சொல்றேன் ஏன்னா எனக்கு ஞாபகம் இருக்குற மேட்டர் எல்லாம் சென்சார் விஷயங்கள் சோ அப்பாலீக்கா நல்ல மேட்டர்ஸ் சொல்றேன்.

ஸ்ரீயாகிய நான் 4

ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.

குழல்

மக்களே!

புல்லாங்குழல் அடிப்படையா கவிதை எழுதலாம்னு பேனா எடுத்தேன். ஆனால் வழக்கம் போல அது காதலையே வாந்தியெடுத்து வைக்க.சரி எழுதியாச்சு உங்களை கஷ்டப்படுத்தாமல் விடுவேனா? அவை கீழே:

1



3

4

5

(பெரிதாக பார்க்க, படங்களை கொஞ்சம் கிள்ளவும்).

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

வருவாயா

எண்ணிக் கொண்டிருக்கிறேன்
உன்னை காதலிக்க
இந்த ஆயுள்
எவ்வளவு குறைவு?
நீ அருகிருந்தால்
சாகாவரம் போதாதே!

உன் கண்களில்
நீந்தி விளையாட,
கைகளில் ஏந்தி
உறவாட ஆசையடி!

காதலில் இருவரும்
கரைந்து போக‌
வருவாயா?

குழந்தை சிரிப்பில்
உறைந்து போக,
கூந்தலில் கொஞ்சம்
தொலைந்து போக வேண்டுமடி!

எல்லா நொடியும்
கடைசிநாளாய் வாழ்வோம்
வருவாயா?

உன்னை காதலிக்க
இந்த ஆயுள்
எவ்வளவு குறைவு?

காதல் தீரும் வரை
காதலிக்க வேண்டும்
வருவாயா?

காதல் தீருமா????


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

திருப்பிக் கொடுக்க முடியுமா

உன்னில் காதல் படித்தேன்,
சிணுங்கலுக்கு வரியமைத்தேன்,
மெளனத்துக்கும் தலையசைத்தேன்.

கண் வழிபுகுந்து கனவுகளுக்கு
உயிர் கொடுத்தேன்,
கூந்தலுக்கு கல்லையும்
பூக்க வைத்தேன்.

இப்போதோ நீ இல்லை,
நானும் தான் இல்லை.

எனக்கு நீ வேண்டாமடி
நான் தான் வேண்டும்
திருப்பிக் கொடுக்க முடியுமா?

நனையவா குடை பிடித்தேன்?
உடைக்கவா சிலை வடித்தேன்?
மறக்கவா காதலித்தேன்?

எனக்கு நீ வேண்டாமடி
நான் தான் வேண்டும்
திருப்பிக் கொடுக்க முடியுமா?

என்னை...

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

சுதந்திரம்

ஏன் கொண்டாடுகிறாய்?
இனாமாய் கிடைத்த
விடுமுறைக்கா சந்தோஷப்படுகிறாய்?
சுதந்திரமா?
எங்கே காட்டு பார்ப்போம்.

சுவாசிக்கவே இன்னொருவனை
வேலைக்கு வைக்கும்
முதலாளி வர்கம்,
இலவசமாக சவக்குழி
கிடைத்தால் சாகும்
ஏழை ஒரு பக்கம்,
கணினி விலை
குறைந்ததற்கு சந்தோஷப்படும்
நடுத்தர வர்கம்.

"டேய்! கணிணி கூழா சாப்பிடப்போகிறாய்?"

"அரச"மரத்தில் மட்டுமே கூடு கட்ட
ஆசைப்படும் சில பறவைகள்,
ஐ.டி . பூங்காவில்
பல செக்கு மாடுகள்,
எட்டு மணி நேரக்கூண்டுக்குள்
குளிர்காயும் இளைஞர்கள்,
வேலை இல்லையென அதிகார்ப்பூர்வமாக
அறிவிக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம்.

ஒளிர்கிறது இந்தியா!!!!!!

வக்கணையான பேச்சு
"இரவில் வாங்கினோம் விடியவில்லை"
இரவில் தானே வாங்கினோம்?
இரவல் வாங்கவில்லையே!
இன்னும் ஏன் அந்நியனுக்கு சலாம்?

அறுபதாண்டு சுதந்திரமே
பணி ஓய்வு பெற்று ஓடு!
மீண்டும் பிறக்கட்டும்
ஒரு சுதந்திரம்...

சா'தீ'யை விழுங்கும் ஃபினிக்ஸ்ஸாய்,
வீட்டை தன் முதுகில் சுமக்கும்
நத்தையாய் உருமாறு
அழகாய் மாறும் இந்தியா!

பொறுத்திருங்கள்
சமத்துவம் பிறக்கும்
அன்று பிறந்த குழந்தையிடம்
கொடுத்து கிழித்தெறியுங்கள்
இந்தக் கிறுக்கலை.

-ஸ்ரீ.

நீ

நீ
எச்சில் படுத்திய தேநீர்
தேன் நீர்!

இருபுறமும் இதயமெனக்கு
புகைப்படத்தில் மட்டும்
என் வலப்பக்கம்
நீ!

நீயில்லாமல்
ஊமையாய் போனது
நான் மட்டுமல்ல‌
என் முந்தக்கூவியும் தான்.

நீ
முத்தமிட்ட பின் தான்
என்
சுவை மொட்டுக்கள்
மலர்ந்தன.

தொடக்கத்திலும்
முடிவிலும்
பக்கங்கள் கிழிந்து போன‌
பிரம்மன் எழுதிய‌
பிரசித்தி பெற்ற‌
மர்ம நாவல்
நீ!


காதல் அழிவதில்லை...
ஸ்ரீ

ஸ்ரீயாகிய நான் 2 ணா அது நான் இல்லீங் ணா

ஸ்ரீயாகிய நான் 1

ம்... இப்போ ஒரு நிலைமைக்கு வந்தாச்சுங்க ஸ்கூல்ல. ஏன்னா வயசுக்கு வந்தவங்க கம்மி அப்போ (அர்த்தம் புரியாதவங்க முதல் பாகம் படிக்கவும்). அடுத்த கட்ட முயற்சியா அழகா முடிவெட்டினேன் 'நம்மவர்' கரண் மாதிரி. எல்லா ஜூனியர் பசங்களும் ஆர்வமா பாப்பானுங்க. எத்தனையோ பேருக்கு நான் ரோல் மாடலா இருந்திருக்கேன். அதனால பீ.இ.டீ வாத்திக்கு என் மேல கொஞ்சம் கான்டு. ஒரு மேச்சு சரியா விளையாடலைனு கத்துனான் நான் "போடா ஹேர்"னு பேட்ட தூக்கி போட்டுட்டு போயிட்டேன். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா பின்னாடி ஒரு பெரிய ஆப்பு வெச்சுட்டான் அவன்.

எப்பவுமே தீபாவளிக்கு எங்க ஸ்கூல்ல வெடி வெச்சே ஆகணும் அது தான் ரூல் (எல்லா ஸ்கூல்லையும் பண்ணுவாங்கனு நினைக்குறேன்). பூனைக்கு யாரு மணி கட்டுறதுனு கேள்வி. நெஞ்ச நிமித்திகிட்டு சரி நான் பண்றேன் மாப்ளைங்களானு சொல்லிட்டேன். அதுல ஒரு டெக்னிக்குங்க சரவெடி வாங்கிட்டு வந்து திரிய நல்லா கிள்ளி அத ஒரு ஊதுவத்தி நடுவுல கட்டணும் அப்புறம் வத்திய பத்த வெச்சிட்டு அப்பீட்டு ஆயிடணும் (தூ... இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்கானு கேக்காதீங்க, நான் அயின்ஸ்டீன் இல்ல இவ்ளே தான் யோசிக்க முடியும் நம்மலால). இதுக்கு பேரு தான் டைம் பாம் (டைம் சரம்னு கூட சொல்லலாம்). நான் கொஞ்சம் பயபுள்ளங்களோட சேர்ந்து அடுத்த ஆப்பரேசனுக்கு ரெடி ஆனேன். பக்காவா பிளான் போட்டு வெச்சோம். ஆனா எந்த முந்திரிக்கொட்டையோ எனக்கு முன்னாடி அத செய்வானு நினைக்கலை.

தீபாவளிக்கு 2 நாள் முன்னாடி. சாமியெல்லாம் கும்பிட்டுட்டு சந்தனம் வெச்சிகிட்டு கிளம்பினேன். என் அம்மா என்னடா புள்ள சாமியெல்லாம் கும்புடாதேனு அப்பவே கேட்டாங்க என்ன தப்பு பண்ண போறியானு. அப்பவாவது நான் உசாரா ஆயிருக்கலாம் ஆனா 'விதி..... வலியது'. காலீல லொகேசன் பாக்க போனேன் (பாத்ரூம் தான் வேற எங்க கொண்டி வெக்க). அங்க நான் "ரெக்வயர்மென்டு கேதரிங்" பண்ணிகிட்டு இருந்தப்ப உச்சா போக ஒரு ஆறாங்கிளாஸ் பையன் வந்தான். "டேய் அண்ணன் கொஞ்சம் வேளையா இருக்கேன் இடத்த காலி பண்ணு"னு சொல்லி தொறத்தி உட்டுட்டேன். பாவம் அந்த பிஞ்சு மனசு என்ன பாடு பட்டிருக்கும்? சே இப்போ நினைச்சா கூட கண்ணு கலங்குது (பீலிங்ஸ்). நான் சும்மா இடம் பாக்க தான் போனேன் நாளைக்கு வந்து வெக்கலாம்னு. ப்ரேயர் நடந்தப்ப பாத்தா என்னோட லொகேசன்ல எவனோ சூட்டிங் பண்ணிட்டான். மானாவாரியா சத்தம். சரம் சூப்பரா வெடிக்குது. ஆனால் பையன் கொஞ்சம் லூசு போல தொட்டி பக்கத்துல கொண்டு போயா வெப்பான் அது எகிறி தொட்டி உள்ள உழுந்திடுச்சு. பாதி தான் வெடிச்சுது ஆனா சோக்கா வெடிச்சுது.

ஒரே எமர்ஜென்சி தான் போங்க. பீ.இ.டீ என்னமோ பெரிய காரியம் நடந்தா மாதிரி ஓடுறான் பாத்ரூமுக்கு. சி.ஐ.டி அந்த மீதி பாதிய போலீஸ் நாய் மாதிரி கவ்விகிட்டு வந்தான். நம்ம பசங்க சும்மாவா இருப்பானுங்க கிளாசுக்கு வந்த உடனே மாம்ஸ் சூப்பர் டானு கை குடுக்குறானுங்க. நான் வெக்கலைனு சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க. சரி யாரு வெச்சா என்ன? நமக்கு வேளை மிச்சம்னு போய் சந்தோசமா உக்காந்துகிட்டேன். ஜுவாலஜி லேபுக்கு ஒன்னும் எழுதாம வந்துட்டேன் அன்னிக்கு. அந்த மேடம் கொஞ்சம் சிடு மூஞ்சு 11thல‌ இருந்தே என்னை பிடிக்காது அதுக்கு. சரி ஏன் திட்டு வாங்கணும்னு உக்காந்து கிளாஸ் நடக்கும் போது கீழ நோட்டை வெச்சி கிறுக்கிகிட்டு இருந்தேன். அப்போ நம்ம பீ.இ.டி பரேடுனு கிளாஸ் ரூமுக்கு வந்தான். கூட பாத்தா நம்ம செல்லம், காலைல நான் தொறத்தி விட்ட செல்லம் தான். பாவம் அவன் அந்த நேரம் வரைக்கும் உச்சா போகலைன்னு நினைக்கிறேன் (மூஞ்சிய பாத்தா அப்டி தான் இருந்தது). நான் அப்போவாவது நிமிந்து பாத்திருக்கலாம் ரொம்ப சின்சியரா எழுதிகிட்டு இருந்தேன் (அது தேவை இல்லை அன்னிக்குனு தெரியாம தான் எழுதுனேன் ஏன்னா நான் லேபுக்கு போகலை). பீ.இ.டீ நான் குனிந்து இருக்கறத பாத்து செல்லத்துக்கிட்ட "இவனா? இவனா?"னு கேட்டான். செல்லமும் இவனே தான்னு கரெக்டா தப்பா சொல்லிட்டான்.

அப்புறம் என்ன? தூக்குங்கடா இவனனு ஒரு ஆடரு நம்ம பீ.இ.டீ கிட்ட இருந்து. நேரா பிரின்ஸி ரூம்ல டைட்டில்ல சொன்னா மாதிரி சொல்லிகிட்டு நான் சிட்டிங் (உண்மைய சொல்லனும்னா நீலிங்). அந்த பிரின்ஸி கூட வேற ஒரு விசயத்துல டிஸ்யூம். ஒரு நாள் திங்கக்கிழமை ஓத் (உறுதி மொழி) எடுக்கும் போது பின்னாடி இருக்க பையன் கிட்ட "டேய் நம்ம பிரின்ஸி பாக்க சி.ஐ.டி சகுந்தலா மாதிரி இருக்கா இல்ல"னு சொல்லிட்டேன். அத பாத்துட்டாங்க. அவ்ளோ கும்பல்லவும் கரெக்டா தெரிந்ததுல இருந்தே தெரியலையா நான் கொஞ்சம் கிளாமர்னு :). அதனால அவங்க வந்து என்னமோ சொத்தே போனா மாதிரி கத்துனாங்க. நான் சொன்னத கூட இருந்தவனுங்களே நம்பலை அது நம்புமா?. மானஸ்தன் நான் நேரா போய் அப்பாவோட வந்துட்டேன். அவங்க இந்த பையன போலீஸ்ல புடிச்சு குடுக்கணும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் எப்டியோ நான் புரூவ் பண்ணி கலங்கத்தை தொடச்சிக்கிட்டேன்னு வைங்க. ஆனா இன்னி வரைக்கும் எவன் வெச்சதுன்னே சொல்ல மாட்டேங்குறாங்க. இதுல இருந்து என்ன தெரியுது?

"வெடி வைங்க ஆனா எவன் கிட்டையும் சொல்லாம வையுங்க"

ஸ்ரீயாகிய நான் 3

ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.

காதல் காலம் 10

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 9 முதல் பாகம் இதோ இங்கே.நேரமில்லாதவர்கள் இதை மட்டும் கூட தனியாகப் படிக்கலாம்.

நிறைமாத கர்பிணியாய் மேகக்கூட்டம். உன்னைக் காண வெளியே கால் எடுத்து வைப்பதற்குள் பிரசவித்து விட்டது. சக்கரைவாகப் பறவையைத் தவிர மற்றவை எல்லாம் மனமுடைந்து கிளைகளில். சக்கரைவாகமாகவே பிறந்திருக்கலாம் மழைக்காலத்திலும் கூட காதலித்திருக்கலாமே என எண்ணத்தில் ஜன்னலோரம் மழையை ரசிக்கிறேன். மழையில் ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தது காற்று. என்னை வந்து சேரும் முன் உன்னைத் தொட்டு விட்டதா அது? இவ்வளவு குளிர்கின்றதே இன்று. அருகில் நீயில்லாமல் சாரல்கள் கூட ஊசியாய் என்னைக் குத்தின. மின்சாரக்கம்பிகளில் சிட்டுக்குருவிகளுக்கு பதிலாக மழைத்துளிகள் தொங்கிக் கொண்டிருந்தன ஆனால் அடுத்து வந்த துளி முன்னால் இருந்ததை தள்ளி விட்டு இடம் பிடித்துக் கொண்டது. ம்... இந்த இயற்கையும் கூட மனிதர்களைப் பார்த்து மாறி விட்டதோ?

கொட்டும் மழைத்துளிகள் பிடித்து வானுக்கு ஏறி மேகங்களை சிறை பிடிக்க மனம் துடித்தது. ஏனோ தெருவோரமாய் மழையில் விளையாடிய குழந்தை உன்னை நினைவூட்ட நீயும் அதை ரசித்துக் கொண்டிருப்பாய் என உணர்ந்த மனம் அமைதியானது. வண்ணம் கரையாமல் பாதுகாக்க என் அறையில் தஞ்சம் புகுந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி. உன் எட்டு நாள் ஆயுட்காலத்தில் ஏன் விளையாடுகிறானோ வருணன்? அந்த குறுகிய காலத்தில் காதலையும் தேனையும் எப்படி சுவைக்கிறாய் சொல்லி விட்டுப்போ.

காலில் தான் உன் சுவை மொட்டுக்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். உன் காலில் என் காதல் தூது கட்டவா? இல்லை அதையும் போய் சேர்ப்பதற்குள் சுவைத்து விடுவாயா? படைத்தவன் கொடுமைக்காரன் ரெண்டு பூக்கள் காதலிக்க உன்னை வெறும் ஆயுதமாக பயன்படுத்துகிறானே? ஆனால் அந்தக் காதலை நீ சுவைக்கும் முன் கல்லறையில் புதைக்கிறான். பூவுக்கு மட்டும் தான் காதல் தூது போவாயா? இன்று எனக்கும் போயேன் என் காதலியும் பூ தான்.

"பூலோகம்
பெயர் வந்ததே
உன்னால் தானோ?"

ரவிவர்மனின் கிழிந்த ஓவியத்துண்டாய் பறந்து வெளியே போனது. மழை நின்றது தெரிய வர நானும் கிளம்பினேன் என் பூவைத் தேடி. வானவில்லாய் வானத்தில் கோலம் போட்டது சூரியன் மழைத்துளியோடு கைகோர்த்து. தூரத்தில் எப்போதும் சந்திக்குமிடத்தில் ஈரமாக நீ, நனைந்து போனேனடி நான்.

"ஏய் இவ்ளோ நேரம் நனைஞ்சுட்டா இருந்த?"

"இல்லை நீ வருவேன்னு காத்துகிட்டு இருந்தேன்."

"பைத்தியம் முதல்ல துவட்டிக்கோ."

"வானவில் எடுத்து தா துவட்டிக்கிறேன்."

"அது வானத்தோட தாவணி. நனைந்து போன தாவணியை வானம் காய வைக்குது. அதுல தொடச்சா உன் அழகு அதுல ஒட்டிக்கும் வேண்டாம்."

சொல்லிக்கொண்டே உன் தலை துவட்ட மீண்டும் மேகம் மழையாய் சிரித்தது. பக்கத்தில் இருந்த வாழைமர இலை பிடிங்கி இருவரும் நடக்கலானோம். உன்னை நனையவிடக் கூடாதென அந்த வாழை இலை கூட மழையோடு தன் ஒட்டு மொத்த பலத்தை திரட்டி போட்டி போட்டு வென்றது ஆனால் நான் சற்று கவனக்குறைவாகத் தான் இருந்து விட்டேன். மழையில் நனைந்ததால் அன்று நான் அழுததை நீ கவனித்திருக்க வாய்ப்பில்லை.

காதல் காலம் தொடரும்... காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

நன் பண்

மீசை அரும்பிய பருவம்
நான் பேசும் மொழி
பெற்றவருக்கும் மற்றவருக்கும்
புறியாமல் இருக்க‌
என் பாஷை பேசி அருகிலமர்ந்தாய்!

சில நேரம்
இரத்தசொந்தங்களும்,இதயச்சொந்தமும்
என்னை குறை கூற‌
அந்த குறைகளோடென்னை
சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டாய்!

சுவாசிக்கவே சோம்பேறித்தனம் படுவாய்
தூக்கத்தில் பசியென நான் உளற‌
கையேந்திபவன் இட்லியோடு
நள்ளிரவில் எழுப்பினாய்,

தூக்கத்துக்காக சாகவும் செய்வாய்
மூன்று மணி நேரத்துக்கொரு முறை
என்னை எழுப்பி
மருந்தை வாயில் திணித்தாய்.

கம்யூனிசம் முதல்
காமசூத்திரம் வரை விவாதம்,
ஒரே குவளை பீர்,
ஒரிலை சோறு,
ஒரு போர்வை தூக்கம்
எப்படி மறப்பேன்?

கொலைப்பழி என் மேல் இருப்பினும்
என் பங்கு எங்கே?
என சட்டையைப் பிடிப்பாயே!

உன்னிடம் நட்புக்கு
கர்ணனே கையேந்துவானடா!
கவலைபடதே நமைப்பிறிக்க‌
அந்த சூழ்ச்சிக்கார கண்ணன் இல்லை.

என் இடப்பக்கம் எப்பவுமே
காலியாகவே இருக்கும் உனக்காக...
அழகான வார்த்தை நண்பன்
ஆனால் தமிழில் எப்போதுமே
தவறாக எழுதப்படுகிறதோ?

"நன்ண்" தான் சரி!!

இந்த நண்பர்கள் தினத்தன்று குறைகளோடு என்னை ஏற்றுக்கொண்ட என் நண்பர்களுக்காக சமர்ப்பனம்.

நட்பும் அழிவதில்லை...
-ஸ்ரீ.

காதல் காலம்‍ 9

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 9 முதல் பாகம் இதோ இங்கே.

மாலைப்பொழுது. தன் பணி முடிந்தும் உறங்கச் செல்லாமல் வானத்தின் விளிம்பில் சூரியன். அழகான செவ்வானம். வீடு திரும்பும் சூரியன் முதுகில் சிவப்புமை அடித்து முட்டாள் தினம் கொண்டடுகிறதா நிலா? இல்லை இரவு - சூரியனை கொலை செய்ய அதன் உதிரமா வானம் முழுக்க?

முதன்முதலாக உன்னை நினைக்காமல் வானத்து விளையாட்டைப் பார்த்தபடி அந்த சூரியகாந்தி தோட்டத்தில் காத்திருக்கிறேன். அனிச்சையாய் நீ வருவதை உணர்ந்தேன் ஆனால் பொய்யாய் தெரியாதது போல நடித்து வானம் பார்க்கிறேன். பின்னிருந்து என் கண்களை கைகளால் கைது செய்தாய்.

"யாரது?"

"நீயே கண்டுபிடி."

"ம்.. ஏதாவது துப்பு குடு."

"அடப்பாவி என் குரல் கேட்டுமா தெரியல?" பக்கத்தில் இருந்த ஒரு குச்சியை எடுத்து அடிக்க வந்தாய்.

"ஏய்.... அங்க பாரு அந்த மேகக்கூட்டம் கூட என்னடா குயில் தோடி ராகத்துல கூவுதுனு என்னைப் போலவே குழம்பிப் போய் இங்க பாக்குது."

"ம்.. கதை சொல்ல சொன்னா நல்லா சொல்லுவ. நான் வந்தது கூட கவனிக்காம உக்காந்திருக்க."

"எனக்கு தெரியுமே நீ வந்தது. தெரிஞ்சா மாதிரி இருந்திருந்தா என் கண்களுக்கு இன்னொரு இமை கிடைச்சிருக்குமா? அந்த சுகம் நிரந்திரமாக கிடைக்குமானால் இருட்டுக்கு வாழ்க்கை பட்டுவிடுவேன் தெரியுமா?"

"பின்னாடி பாக்கவே இல்ல நீ. அப்புறம் எப்படி தெரியும் உனக்கு?"

"அங்க பாரு அந்த சூரியகாந்தி எல்லாம் நீ இங்க இருக்கன்னு சாயந்திரம் கூட கழுத்து வலிக்க கிழக்கைப் பார்த்துகிட்டு இருக்கு. அது எல்லாம் இந்த பக்கமா திரும்பினதை பாத்து நீ வந்ததை தெரிஞ்சிக்கிட்டேன்."

"போதும்பா விட்டா நிறுத்தாம பேசுவ நீ."

சொல்லிக்கொண்டே வைக்கோல் போரின் மேல் சாய்ந்தாய். அந்த வயலில் இருந்த நாத்துக்களெல்லாம் உடனே சாகத்தயாரனது எனக்கு மட்டும் தானடி தெரியும்.

ஊமைக் கரையோடு கதையடிக்கும் நதியாய், பூக்களின் தவத்தை கலைக்கப் பாடும் வண்டாய் பேசி, உன் அழகால் பசித்து, வெட்கத்தை புசித்து, சிறிது நேரம் மடியில் தவழ்ந்து காலத்தின் வயதை அதிகரித்தேன்.

உன் தாலாட்டுப் பேச்சில் மயங்கி கிடந்தவனை உனக்கு எசைப்பாட்டு பாடும் குயில் எழுப்பியது. தலை கோதிக் கொண்டே நீ இருக்க மனம் முர‌ட்டுக்குதிரையாய் பாய்ந்து ஓடியது எண்ணக்காட்டில். ("நான் சஹாராவின் சகோதரன் என் பகல்கள் சுடும், இரவு குளிரும் அது தான் வழக்கம் ஆனால் இவள் வந்து என் வாழ்ககை வீதிகளில் வண்ணம் விசிறியடித்து இப்போது ஒன்னும் தெரியாதது போல உக்காந்து இருக்கா." யோசனையில் நான்.)

"என்ன யோசிக்கிற?"

"ஒன்னும் இல்ல இன்னும் 2 மாசத்துல‌ காலேஜ் சேரணும். நாம பிரிஞ்சிடுவோமா?"

"எதுக்கு பிரியணும்? நாம ரெண்டு பேரும் ஒரே காலேஜுல சேந்தா போச்சு."

"நடக்குமா?"

"ஏன் நடக்காது? வேணும்னா பாரு நாம ஒன்னாதான் படிக்கப்போறோம்."

நீ சொன்னதால் அது உண்மையில் நடந்தது போலவே எனக்கு தோன்ற இருவரும் சிரிப்போடு கிளம்பினோம் வீட்டுக்கு. உதட்டில் சிரிப்பு இருந்தாலும் மகிழ்ச்சியாக இல்லாதது ஒரு அறிவு கொண்ட செடிகளுக்கு கூட தெரிந்தந்தது. காலையில் பார்த்த வண்ணங்கள் எல்லாம் தன்னுள் இருந்தாலும் இந்த வானம் ஏன் நட்சத்திரங்களால் ஓட்டை போடப்பட்ட கருப்பு புடவையை கட்டிக்கொள்கிறது? ஒரு வேளை என் சோகத்தை பகிர்ந்து கொள்கிறதோ?

காதல் காலம்‍ -10

காதல் காலம்‍ தொடரும்... காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

கன்னி ராசி

ஒவ்வொரு நாளும்
நான்
போய் வரும் போது
ஜன்னல் கம்பிகளில்
புன்னகைப் பூத்திருக்கும்
கண்களாலேயே
கையசைப்பாய்
திடீரென்று
உன்னைக் காணவில்லை
என் மின்னலைக்
கைது செய்தது யார்?
பிறகு தான் தெரிந்தது
உனக்குத் திருமணம் ஆகிவிட்டது.
என்ன செய்வது?
எனக்கு ராசி மட்டும் தான்
"கன்னி".

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

வாழ்நாள் சேகரிப்பவன்

உன் கண்சிமிட்டல்களைச் சேகரித்தால்
மின்னல்,
உன் புன்னகைகளைச் சேகரித்தால்
பூந்தோட்டம்,
உன் க்ண்ணீர்த்துளிகளைச் சேகரித்தால்
ஆலகாலம்,
உன் இதழ்த்துளிகளை சேகரித்தால்
தேன்கூடு,
உன் வெட்கத்தினை சேகரித்தால்
அந்தி,
உன் இதயத்துடிப்பைச் சேகரித்தால்
என் வாழ்நாட்கள்!


என்னவளே!
உனக்குத்தெரியுமா?
தாஜ்மகாலின்
சுவரில்
உன் பெயரையும்
என்
அடுப்புக் கரியால்
எழுதி வைத்தேன்
எல்லோரும்
அதிசயமாய்ப் பேசிக்கொள்கிறார்கள்
அந்த எழுத்துகளில் தான்
ரோஜாவின் மணம் வீசுகிறதாம்.
என்னை
இப்போதும்
"பைத்தியம்" என்கிறாயா?

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

உன்

அதென்னடி ரகசியம்?
உன்
கூந்தல் சேரும்
பூக்கள்
உயிர்த்தெழுகின்றன?

உன்
உதட்டு ரேகை
கிடைக்குமா?
எனக்கு ஜோசியம்
பார்க்க வேண்டுமாம்.

உன்
இமைப்புகளின்
எதிரொலியே
என் இதயத்துடிப்புகள்.

உன்
ஒற்றை முடி
கொடுப்பாயா?
என் உயிர் கட்டத்தேவை!

உன்
சிரிப்பை
கொஞ்சம் கடன் தா
மோனாலிசாவை
வெறுப்பேற்ற ஆசை.


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.