தூணிலும் காதல் துரும்பிலும் காதல்




காதல்
விஷ மாத்திரையா?
விஷம மாத்திரையா?

*

பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்துப் போனாய்.

*

நீ
ஒவ்வொறு முறை சிரிக்கும் போது,
அகராதியில்
அழகென்ற வார்த்தையின் அர்த்தம்
இன்னும் அழகாய்
திருத்தி எழுதப்படுகின்றது.

*

சிறுவயது புகைப்படத்தில்
தூணுக்கு பின் நீ,
உனக்கு நாவல் பழம் எடுத்து வந்த
துருவேறிய என் வடிவியல் பெட்டி*,
பார்
காதலும்
தூணிலும் இருக்கும்,
துரும்பிலும் இருக்கும்.

*

புது மழையில்
கைகள் விரித்தபடி
கண்கள் மூடி
மகிழ்ந்தாயே!
அன்று தான்
சிலுவையில் அறைந்த
இயேசு சிரித்துப்பார்த்தேன்.


*வடிவியல் பெட்டி - Geometry Box.

(புது கூடு கட்டிக்கிட்டு இருக்கேன். இது தான் இந்த தளத்தில் கடைசி பதிவாய் இருக்கும் என நினைக்கிறேன். எல்லா புதன்கிழமையும் பதிவு போட்டு வந்ததால் இந்த வாரம் விடுபட்டுவிடக்கூடாதென கைக்கு வந்த கவுஜைகளை கிறுக்கி இருக்கேன். பொறுத்தருளவும் :). புது கூட்டில் சந்திப்போம்.)

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

19 கால்தடங்கள்:

Divya said...

அவசரத்தில் கிறுக்கிய கவிதையும் நல்லாவே இருக்குது!!

\நீ
ஒவ்வொறு முறை சிரிக்கும் போது,
அகராதியில்
அழகென்ற வார்த்தையின் அர்த்தம்
இன்னும் அழகாய்
திருத்தி எழுதப்படுகின்றது.\

நல்லாயிருக்கு இந்த வரிகள்!!

புது வலைதளம் தொடங்கி இருக்கிறீங்களா ஸ்ரீ??

புகழன் said...

//
பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்து போனாய்.
//
நல்லாயிருக்கு கவிதை

//
புது கூடு கட்டிக்கிட்டு இருக்கேன். இது தான் இந்த தளத்தில் கடைசி பதிவாய் இருக்கும் என நினைக்கிறேன்
//
புதிய கூட்டின் முகவரியைக் கூறும் பதிவுதான் கடைசிப் பதிவாய் இருக்கும் என நினைக்கிறோம்.

விரைவில் புதுமைகளை எதிர்பார்தது
உங்கள் புகழன்.

FunScribbler said...

kavithai is super!

//நீ
ஒவ்வொறு முறை சிரிக்கும் போது,
அகராதியில்
அழகென்ற வார்த்தையின் அர்த்தம்
இன்னும் அழகாய்
திருத்தி எழுதப்படுகின்றது.//

excellent lines. really enjoyed reading ur poem. keep rocking!!

BeeJay said...

machi.. chancey illada.. especially the second one. .
vidaikudkaamal vina kuduthal yendraye... class !!

Sen22 said...

//பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்துப் போனாய்.//

Good one..
I like this...


Senthil,
Bangalore

கோபிநாத் said...

\\சிறுவயது புகைப்படத்தில்
தூணுக்கு பின் நீ,
உனக்கு நாவல் பழம் எடுத்து வந்த
துருவேறிய என் வடிவியல் பெட்டி*,
பார்
காதலும்
தூணிலும் இருக்கும்,
துரும்பிலும் இருக்கும்.\\\

சூப்பரு..ராசா..;)

புது வலைதளத்தை பத்தி தகவல் கொடு ராசா ;)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்துப் போனாய்.//

அழுத்தம் ஸ்ரீ!

கவிதைகள் வழக்கம் போல் அழகு :)

Sri said...

//பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்து போனாய்.//
very very nice lines.......!!
enjoyed......!!
ella kavithaium super Sri..!! :-)

ஸ்ரீ said...

// Divya said...

அவசரத்தில் கிறுக்கிய கவிதையும் நல்லாவே இருக்குது!!//

அப்படியா நன்றிங்கக்கா.

//புது வலைதளம் தொடங்கி இருக்கிறீங்களா ஸ்ரீ??//

ஆமாம் திவ்யா. இன்னும் முழுமையாக எதும் செய்யாமல் கிடக்கிறது. அநேகமாக அடுத்த புதன் இயங்க ஆரம்பித்துவிடும் என நினைக்கிறேன். முடிகிறதா என பார்ப்போம் :)

ஸ்ரீ said...

//புகழன் said...

நல்லாயிருக்கு கவிதை //

அப்பாடா இந்த முறையாவது புரிந்துவிட்டதே! ;).

//புதிய கூட்டின் முகவரியைக் கூறும் பதிவுதான் கடைசிப் பதிவாய் இருக்கும் என நினைக்கிறோம்.//

ஆஹா நீங்க கரெக்டா கேள்வி கேட்டுடுறீங்களே! அது வெறும் தகவல் பதிவாக தான் இருக்கும் என நினைத்தேன் அதனால் தான் இதை கடைசி பதிவு என எழுதினேன்.

//விரைவில் புதுமைகளை எதிர்பார்தது
உங்கள் புகழன்.//

கண்டிப்பாக என்னால் முடிந்தவரை புதுமை தர முயற்சிக்கிறேன். நன்றி.

ஸ்ரீ said...

//Thamizhmaangani said...

kavithai is super!

excellent lines. really enjoyed reading ur poem. keep rocking!!//

தமிழ்மாங்கனி ரொம்ப நன்றிங்க வாசித்து பின்னூட்டமிட்டமைக்கு :)

ஸ்ரீ said...

// Neo.... the One said...

machi.. chancey illada.. especially the second one. .
vidaikudkaamal vina kuduthal yendraye... class !!//

நன்றி ஹை மாப்ள. அப்போ அப்போ வா ராசா. ரொம்ப நாள் ஆச்சு போல வந்து. Classa எத்தனாங் கிளாசு? ;)

ஸ்ரீ said...

//Sen22 said...

Good one..
I like this...


Senthil,
Bangalore//

வாங்க செந்தில். நம்மூரு தானா நீங்க? நன்றிங்க செந்தில்.

ஸ்ரீ said...

// கோபிநாத் said...

சூப்பரு..ராசா..;)//

வெரி குட் அண்ணாத்த. எப்பவும் எனக்கு பிடித்த ஒரு கவிதை இருக்கும் ஆனா படிக்கும் எல்லோரும் அதை விட்டுவிட்டு நான் இடத்தை நிரப்ப எழுதிய கவிதை தான் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க :(. எப்பவுமே நீங்க தான் அதை சரியா சொல்றீங்க. நாம் ஒரே அலைவரிசையில் இருக்கோம்.

// புது வலைதளத்தை பத்தி தகவல் கொடு ராசா ;)//

இன்னும் அது முழுமையாக இயங்கவில்லை அண்ணேன். அதுக்கு ஒரு பதிவு போடுறேன். :)

ஸ்ரீ said...

// sathish said...

அழுத்தம் ஸ்ரீ!

கவிதைகள் வழக்கம் போல் அழகு :)//

நன்றி தல :)

ஸ்ரீ said...

// Sri said...

very very nice lines.......!!
enjoyed......!!
ella kavithaium super Sri..!! :-)//

அப்படியா ஸ்ரீ ரொம்ப நன்றிங்க வந்ததுக்கு.

ஜி said...

avasarathula kirukunaalum attakaasamaa irukuthu :)))

ஸ்ரீ said...

//ஜி said...

avasarathula kirukunaalum attakaasamaa irukuthu :)))//

எல்லாம் உங்க பயிற்சி தான் ஜி. என்ன உங்க சிஷ்ய புள்ள ஓகேவா. தேரிட்டானா?

மஹாராஜா said...

//புது மழையில்
கைகள் விரித்தபடி
கண்கள் மூடி
மகிழ்ந்தாயே!
அன்று தான்
சிலுவையில் அறைந்த
இயேசு சிரித்துப்பார்த்தேன்.//

ஐயோ.. முடியலடா சாமி...
இது எல்லாம் எங்க இருந்து வருமோ...
புதுசு புதுசா யோசிபீங்களோ ?