காதல் பால்

1

விளக்கம்: தீக்காயம் கூட ஆறிவிடும் ஆனால் காதலியின் முத்த வடுக்கள் ஆறாது. அந்த வடுக்களே காதலின் சின்னம்.

2

விளக்கம்: மழையை எதிர்நோக்கியே இந்த உலகம் வாழ்வது போல் என்னவளின் கண்ணை நோக்கியே வாழ்ந்து பழகிவிட்டேன்.

3

விளக்கம்: மயிர் நீங்கிவிடின் வீழ்ந்து மடியும் கவரிமான் போல உண்மைக் காதலர்கள் உயிர் நீப்பர் காதலுக்காக.

4

விளக்கம்: எப்படி இந்த உலகம் காதல் இன்றி அமையாதோ அதே போல் அவள் இல்லாமல் என் உலகமும் அமையாது.

5

விளக்கம்: காதலோடு பிறப்பதே நன்று அப்படி இல்லாதார் பிறக்காமல் இருப்பதே மேல்.

6

விளக்கம்: காதல் செய்து வாழ்வதே உண்மையான வாழ்க்கை ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

7

விளக்கம்: நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் காதல் வேண்டும்.

8

விளக்கம்: தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து கட்டியணைக்க காதல் பெருகிக் கொண்டே இருக்கும்.

9

விளக்கம்: காதலித்தே சிலர் வாழவேண்டும் என்று கடவுள் முடிவு செய்து இருந்தால், அக்கடவுளும் காதலனைப் போல் அலைந்து திரிந்து வருந்த வேண்டும்.


10

விளக்கம்: மந்திர ஜாலம் செய்து நெருப்பின் நடுவில் ஒருவன் தைரியமாய்ப் படுத்துறங்கலாம்; காதல் வந்தபோது கண்மூடி ஒருவனால் உறங்க முடியாது.


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

10 கால்தடங்கள்:

Anonymous said...

Hi Sri,
Most of them are good friend. Nice creative thinking. My wishes.

ஸ்ரீ said...

// Anonymous said...

Hi Sri,
Most of them are good friend. Nice creative thinking. My wishes.//

நண்பரே வந்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றி!!! பெயராவது சொல்லி இருக்கலாமே நீங்க :)

Divya said...

குறளும் விளக்கமும் அருமை,

படங்களின் தேர்வு.....கவர்ந்தது!

ஸ்ரீ said...

// Divya said...

குறளும் விளக்கமும் அருமை,

படங்களின் தேர்வு.....கவர்ந்தது!//

வாங்க திவ்யா, குறள் ஏற்கனவே இருந்தது தானே ஆல்டரேசன் கொஞ்சம் சுலபமான விஷயம் தான். கருத்துக்கு நன்றீங்கோ.....

சேதுக்கரசி said...

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா!! இன்னொரு காதல் கவிஞரா? வாழ்த்துக்கள் :-)

ஸ்ரீ said...

//சேதுக்கரசி said...

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா!! இன்னொரு காதல் கவிஞரா? வாழ்த்துக்கள் :-)//

ஆஹா!!!! வாங்க சேதுக்கரசி வாங்க. வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி. காதல் கவிஞரா? நானா?. வேணும்னா குட்டி கவிஞரா இருந்துட்டு போறேனே :). மறுபடியும் வரலாம் தப்பில்லை :D. நன்றி.

King Vishy said...

summa nacchu nu irukku :)

ஸ்ரீ said...

//King Vishy said...

summa nacchu nu irukku :)//

ஹி ஹி என்னங்க விளம்பர படம்ல வரா மாதிரி பின்னூட்டம் போட்டிருக்கீங்க. நன்றி :)

நவீன் ப்ரகாஷ் said...

ஸ்ரீ !! :))

காதல் பால் மிகவும் ரசித்தேன்....

குறிப்பாக...

கட்டியணைத்தூறும் காதல் – குறும்பு கூத்தாடுகிறது

அவளின்றி அமையாது ஒழுக்கு - அப்படியா ??

அழகான படங்களும் வரிகளும் காதலன் காதலிபோல அழகோ அழகு..

ஸ்ரீ said...

//நவீன் ப்ரகாஷ் said...

ஸ்ரீ !! :))

காதல் பால் மிகவும் ரசித்தேன்....//

தல வாங்க தல சின்ன பையன் வ்லைப்பூக்கு வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி!!

//குறிப்பாக...

கட்டியணைத்தூறும் காதல் – குறும்பு கூத்தாடுகிறது //

எல்லாம் உங்க கிட்ட இருந்து தொற்றிக்கொண்டது தான் ;)

//அவளின்றி அமையாது ஒழுக்கு - அப்படியா ??//

என்ன பண்றது அப்போ அப்போ கேப்புள கடா வெட்டணுமே. உங்களுக்கு தெரியாததா??

//அழகான படங்களும் வரிகளும் காதலன் காதலி போல அழகோ அழகு..//

சுருக்கமாக காதல் போல் அழகு என வைத்துக்கொள்ளலாமா? :D

நன்றி!!