இதுவும் காதல்

"மஞ்சுளா பரிட்சை முடிஞ்சதும் வெளியில நில்லு அண்ணன் வந்து கூட்டிக்கிட்டு வந்திடுவான். சாயந்தரம் பொண்ணு பாக்க வராங்க." அம்மா

செல்வதை காதில் போட்டுக்கொள்ளாமல் தயாரானாள். தோழிகள் பாடத்தை அசைப்போட்டுக்கொண்டு வர மஞ்சுளா வாடிய முகத்தோடு நடந்து

சென்றாள். பரிட்சை மணி அடிக்க 15 நிமிடங்கள் மீதம் கடிகார முட்கள் வேகமாக பாய்ந்தன. சைக்கிளில் ரெக்கை கட்டி பறந்து வந்தான் சிவா.

"எப்படி படிச்சிருக்க?" மஞ்சுளாவிடம் கேட்க, அவள் கண்ணில் குளம்.

"என்ன ஆச்சு?"

"என்னை பொண்ணு பாக்க வராங்க."

12 வகுப்பு பொது தேர்வு. குழப்பத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள்.

"சரி அதெல்லாம் கொஞ்சம் நேரம் மறந்திடு இப்போ போய் ஒழுங்கா பரிட்சை எழுதிட்டு வா."

"முடியாது என் அண்ணன் பரிட்சைக்கு அப்புறம் வெளியிலேயே நிப்பான். வேற வழியே இல்லை." பேசிக்கொண்டே அழத்தொடங்கினாள்.

"சரி இப்போ என்ன தான் பண்ணனும் சொல்லு."

"கல்யாணம்"

"எப்போ?"

"இப்போ உடனே."

"விளையாடுறியா?"

"இது நடந்து ஆகணும் இல்லை இன்னைக்கே செத்துடுவேன்." வழக்கம் போல தன் பிடிவாதத்தில் இருந்து விலகாமல் பேசினாள் மஞ்சுளா. அவள்

குணம் அது. ஒரு விஷயம் முடிவு செய்து விட்டால் மாறமாட்டாள்.

"பைத்தியமா உனக்கு?"

"ஆமாம். பதில் சொல்லு முடியுமா? முடியாதா?"

இருந்த 10 நிமிட அவகாசத்தில் முடிவெடுத்தார்கள். நேரே கோயிலுக்கு போய் கல்யாணம் செய்து வீடு திரும்பினார்கள். ராமநாதன் ஏதோ

யோசனையில் ஆழ்ந்திருந்தார். முகத்தில் இறுக்கம்.

"அப்பா!"

"என்ன டா சிவா! பரிட்சை எப்படி எழுதின?" உயிர் இல்லாத குரலில் கேட்டுவிட்டு விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

"அது வந்து...." நடந்ததை அப்படியே அவரிடம் சொன்னான்.

வெளியில் வந்து மஞ்சுளாவைப் பார்த்து, "பரந்தாமன் மகளா நீ? ஏற்கனவே எங்களுக்கு ஆகாது. இவனை தாய் இல்லாத பையனாச்சேனு செல்லம்

குடுத்து வளத்தது என் தப்பு தான் மா. போங்க என்ன ஆகப்போகுதோ! பெத்த பாவத்துக்காக அவனுக்கும் அவனை நம்பி வந்த பாவத்துக்காக

உனக்கும் சோத்தப்போடுறேன்."

மஞ்சுளா வீட்டார் விஷயமறிந்து சிவா வீட்டு வாசலில்....

"யோவ் புள்ளையா வளத்து வெச்சிருக்க?...................................."

அரை மணி நேரம் கழித்து ஆத்திரம் அடங்க, "அவ என் பொண்ணே இல்லையா. எப்படியோ ஒழிஞ்சிபோகட்டும்" கடைசியாக மஞ்சுளா அப்பா

வயிரெரிய கத்தி விட்டு போனார்.

இரவு சாப்பாடின் போது "இப்போ சந்தோஷமா உங்களுக்கு?" கேட்டுவிட்டு படுக்கப் போனார் ராமநாதன்.

பின் சென்ற சிவா "அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா...." அவ்வளவு நேரம் அடக்கிவைத்த அழுகை உடைந்து ஊற்றியது.

"போடா போ உன் மாமன் சொத்த கேட்டு கேஸ் போட்டிருக்கான் இன்னிக்கு. சொந்தத்தால பணக்கஷ்டம் புள்ளையான மனக்கஷ்டம் அவ்ளோ

தான் டா."

"என்னப்பா சொல்ற?"

முன்பு ஒரு நாள் போதையில் சொத்தை சிவா மாமன் எழுதி வாங்கியதை சொல்லி முடித்து அப்படியே தூங்கிப்போனார் ராமநாதன்.

வாழ்க்கை நடுவில் சிக்கிக்கொள்ள தன் பொண்டாட்டியை சினிமாவுக்கு கூட்டிப்போக வேண்டுமென்றால் கூட தன் தந்தையிடம் கையேந்தும்

நிலையில் சிவா. விரக்தியான முகத்தோடு இல்லையென சொல்லாத ராமநாதன். மாதம் உருண்டோட வழக்கில் தோற்று வீடு திரும்பிய ராமநாதன்

தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை. சொந்தம் ஏமாற்ற வேறொரு ஊரில் கையில் பத்து ரூபாய் பணத்தோடு வீதியில் காதல் நின்று

கொண்டிருக்கின்றது.

"பசிக்குது டா...."

"ம். வா போலாம். கையேந்திபவன் இருக்கு சாப்பிடலாம்."

"பாட்டி, இட்லி எவ்ளோ பாட்டி?"

"ரெண்டு 5 ரூபா பா."

"நாலு குடு பாட்டி."

பசியில் அந்த இட்லியை அவசரமாக வாங்கினாள் மஞ்சுளா.

"மஞ்சு கொஞ்சம் திரும்பிக்கோயேன்."

"ஏன்?"

"இல்லை ரொம்ப பசி நான் சாப்பிடுறத பாத்தா நல்லா இருக்காது."

ஏதும் யோசிக்க பசி அனுமதிக்காமல் திரும்பிக்கொண்டாள். சிவா இலையில் இருந்த இட்லியை மீண்டும் பாட்டியின் தட்டில் போட்டான்.

திரும்பிய மஞ்சு, "என்னதான் பசியா இருந்தாலும் இப்படியா சாப்பிடுவ?" அப்பாவியாக கேட்டாள்.

"இன்னும் 2 வாங்கிக்கோ" சொல்லிக்கொண்டே தான் திருப்பி வைத்த இட்லிகளை அவளுக்கு வைத்து தண்ணீர் குடித்தான்.

"ஏய் காசு?"

"ம் இருக்கு 15 ரூபா வெச்சிருந்தேன் நீ சாப்பிடு."

இது பார்த்த பாட்டி விவரம் கேட்க எல்லா கதையும் சொன்னார்கள்.

"என் புள்ள வருவான் நான் உனக்கு ஏதாவது வேலை வாங்கி தர சொல்றேன்யா." அவள் சொன்ன பிறகு தான் இருவருக்கும் உயிர் வந்தது.


"என்ன தெரியும் தம்பி உனக்கு?" நல்ல ஆஜானுபாகுவான பாட்டியின் மகன் ஜோசப் கேட்டான்.

"அண்ணா ஒன்னும் தெரியாதுண்ணா ஆனா என்ன சொன்னாலும் செய்யறேண்ணா."

"கார் ஓட்டுவியா?"

"ம் சுமாரா ஓட்டுவேண்ணா."

"சரி நாளைக்கு காலைல இதைப்பத்தி பேசலாம் போய் தூங்கு."

நடுக்கடலில் தத்தளித்த கைகளுக்கு ஏதோ கட்டை சிக்கியது போல உணர்ந்தார்கள். நல்ல தூக்கம் வெகுநாட்கள் கழித்து.

"தல நான் சொல்லலை தம்பிக்கு தான் வேலை. காரு ஓட்டுவாப்புள" தன் தலைவனிடம் சிவாவைச் சேர்த்து விட்டு தன் வேலை முடிந்ததாக

நினைத்து ஜோசப் கிளம்பினான்.

"அவர் கூட போய் என்ன ஏதுன்னு பாத்து தெரிஞ்சிக்கோ போ". ஆதி அந்த ஊர் கட்டப்பஞ்சாயத்து தாதா.

அன்றிலிருந்து அழகான வாழ்க்கை ஆரம்பம். ஆனால் ஏனோ மஞ்சுவுக்கு அதில் நாட்டம் இல்லை எப்பவுமே ஏதோ இழந்தது போல தோன்றியது

அவளுக்கு. மூன்றாவது ஜீவன் அடியெடுத்து வைத்தது அவர்கள் வாழ்வில்.

"டேய் சிவா இவனை நல்லா வளத்து காட்டணும் டா."

"கண்டிப்பா ஆனா ஏன் எப்பவுமே சோகமாவே இருக்க?"

"ஒன்னும் இல்லை சொன்னா கோச்சிக்க மாட்டியே!"

"சொல்லு. உன்னை எப்போ நான் கோச்சிக்கிட்டு இருக்கேன்?"

"பக்கத்து வீட்டு பொம்பளை கூட என்னை அடியாள் பொண்டாட்டியா தான் பாக்குறா. பேச கூட மாட்டேங்குறா. இந்த வேலை வேண்டாம் டா."

"ரோட்டுல நிக்கும் போது அவன் தான் சோறு போட்டான்." ஊருக்கே கேட்கும் படி கத்தி விட்டு வெளியேறினான்.

அன்று நடந்த சண்டையில் கால் வெட்டப்பட்டு பாதி உயிரோடு தான் திரும்ப வந்தான் சிவா. அழுகைக்கு பஞ்சமில்லை. தன் நிலையை நினைத்து

இருவரும் அழுதனர் இன்னொருவருக்கு தெரியாமல். மஞ்சுளா பாரத்தை சுமக்க முடிவெடுத்து வெளியேறினாள்.

"சிவா எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு டா இனிமே கஷ்டம் இல்லை நீ கவலைப்படாதே" ஆறுதல் கூறி அவனை அன்றிலிருந்து

தூங்க வைத்தாள்.

"என்ன சிவா எப்டி இருக்க?" ஜோசப் மாதங்கள் கழித்து நலம் விசாரிக்க வந்தான்.

"இப்போ தான் நியாபகம் வந்துச்சா? என் பொண்டாடி அப்பவே சொன்னா இதெல்லாம் வேணாம்னு. நான் தான் உங்களுக்கு சிபாரிசா பேசுனேன்.

எனக்கு இதெல்லாம் தேவை தான்."

"அது வந்து சிவா......"

"என்ன இன்னும் ஏதாவது வேலையாகணுமா? என்னால ஒன்னும் முடியாதுப்பா என்னை பாத்துக்கவே ஒரு ஆள் வேணும். நீங்க கிளம்புங்க."

"இல்லை சிவா நம்ம மஞ்சு..."

இரவு வீடு திரும்பிய மஞ்சுளா குழந்தை அழ அவசரமாக உள்ளே ஓடி வந்தாள்.

"என்ன ஆச்சு குழந்தை அழுவுது நீ சும்மா தூங்கிட்டு இருக்க."

"ம் அதுவாவது தன் சோகத்தை அழுது காட்டுது."

"என்ன ஆச்சு உனக்கு?"

"எப்படி இருக்கு வேலை பரவாயில்லையா?"

"ம் ஏதோ போது."

"எத்தனை பேரு இன்னிக்கு?"

"என்ன கேட்ட?"

"அதான் பாக்குறியே ஒரு வேலை அதுல தான் எத்தனை பேரு வந்தாங்கன்னு கேட்டேன்."

சிவாவின் முகம் பார்க்க முடியாமல் மஞ்சுளா கட்டிலில் திரும்பி அழ ஆரம்பித்தாள்.

"ஏன் உனக்கு வேற ஏதும் தோணலையா? இப்படித்தான் போகணுமா?"

"ஆமாம் நான் என்ன என் சந்தோஷத்துக்கா போனேன்? அடியாள் பொண்டாட்டின்னு வீட்டு வேலைக்கு கூட சேத்துக்கலை. கம்பனியில கூட இதே

தொல்லை தான் டா. ஒரு பக்கம் நீ இன்னொரு பக்கம் நம்ம குழந்தை நான் என்ன செய்வேன் டா. இது தப்பா தெரியலாம் ஆனா யோசிச்சு

பாத்தா எனக்கு இது தப்பா தெரியலை. இந்த ஊருக்கு வந்தப்ப நீ சாப்பிடாம குடுத்த இட்லி மாதிரி தான் டா இதுவும். டேய் சிவா இது வெறும்

உடம்பு டா. மத்தவன் கூட போனா நான் கெட்டவள் ஆக மாட்டேன் அவனுக்கு அரை மணி நேரம் நான் தேவை அவ்ளோ தான் ஆனா அதுக்கு

மேல நான் அவனுக்கு ஒன்னும் பண்ணமாட்டேன். அதுவே உனக்கு ஒன்னுன்னா யோசிக்காம கூட உயிர குடுப்பேன் டா அதான் காதல். நான்

உன்னை காதலிக்குறேன் டா." கட்டிப்பிடித்து அழுதாள் மஞ்சுளா.

(முற்றும்)


{பாட்டம் லைன்:
==========
குழந்தைகாக பட்டினியாய் படுத்து, புருஷனுக்காக இன்னொருத்தனோடு கட்டிலில் படுக்கும் இவளும் பத்தினி தான். இதுவும் காதல் தான்.

காதல் இல்லை உண்மையான காதல்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதானது...... }


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.


(நண்பர்களே! இது என்னுடைய முடிவு தான் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.)

காதல் காலம் நிறைவுப்பகுதி

நண்பர்களே! புதிய இணையதளம் ஒன்று துவங்க உள்ளதால் இந்த வலைப்பூவில் ஆரம்பித்த இந்த தொடர்கதையை இதிலேயே முடிக்கும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. கதையில் மாற்றம் இல்லை இது தான் முடிவு.

காதல் காலம் -1

தேவதை வாக்கு பலிக்குமா? நீ சொன்னது போலே இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். அப்படி சொல்வதை விட நான் சேர்ந்த கல்லூரியில் நீயும் அதிக மதிப்பெண் எடுத்தாலும் வந்து சேர்ந்தாய். நம் ஊருக்கு அருகிருப்பதால் உன் அப்பா சம்மதிக்க. நம் காதலை கல்லூரிக்கு பத்திரமாக கொண்டு சென்றோம் இருவரும். கல்லூரிக்கு ரயில் பயணம். அவசரத்தில் ஓடி வரும் உனக்காக நான் காத்திருந்தாலும் ரயில் காத்திருக்காத அந்நாட்களில் பேருந்தில் சேர்ந்து பயணித்தோம். பயணத்தில் பின்நோக்கி ஓடும் மரங்கள், உன்னை நோக்கி ஓடும் மனம். தினம் சன்னலோர இருக்கைக்காக சண்டை போடுவாய். ஊடலில்லாமல் காதலா? உன்னோடு சண்டையிட்டு வேண்டுமென்றே தோற்று உன் அருகில் அமர்வேன். வென்ற பரவசத்தில் உன் கண்களில் சின்ன மின்னல்கள் மின்னி மறையும். எனக்கு ரயிலோடு பயணங்கள் இல்லை அந்த நாட்கள், ஒரு மயிலோடு பயணம்.

தினம் உன்னோடு வரும் போது தேரை வடம் பிடித்திழுக்கும் பக்தன் போல பெருமிதம். வகுப்புகளில் மனம் முழுக்க உன் நினைவுகள், ஏடுகள் முழுக்க உன்னை பற்றிய கிறுக்கல்கள். காற்றில் படபடக்கும் புத்தகதாள்களாக கடைசி மணி அடிக்க ஏங்கிக்கிடக்கும் மனம். உன் கோவம், அழகு, சிரிப்பு இவைகளில் தொலைந்து போனதடி அந்த நாட்கள். பட்டாம்பூச்சி பிடிக்கும் சிறுவனாக உன்னை விட்டு அகலாத கண்களோடு சுற்றி வந்தவனாக நான். விளையாட்டாய் ஓடின 4 வருடங்கள் கல்லூரியில். வேலைக்கிடைக்காமல் நான் மனமுடைந்த வேளை. உன் வீட்டில் உனக்காக வரன் தேட, இருவரும் காதலை வீட்டில் சொன்னோம். அடுத்த நாள் வாடிய முகத்தோடு வந்து,

"அப்பா ஒத்துக்க மட்டேங்குறார். நாங்க வேற ஊருக்கு போறோம்." என்று சொல்லிச் சென்றவளை இப்போது தான் பார்க்கிறேன். அன்று பேசமுடியாமல் வாயடைத்து போனவன் தான் இன்று வரை பேச வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன்.

"சிவா! டேய் சிவா!" அம்மா கதவு தட்டும் சத்தம். கண்களை துடைத்துக் கொண்டே ஏதும் நடக்காதவன் போல கதவு திறந்தேன்.

"என்ன? இன்னும் 6 மணி கூட ஆகலை அதுக்குள்ள ஏன் எழுப்பின?"

"சிவா! இப்போ தான் டா மஞ்சுளா அம்மா கிட்ட இருந்து போன் வந்தது."

"என்ன?" அதிர்ச்சியில் உரைந்தேன்.

"சீக்கிரம் கிளம்புடா."

"என்னம்மா சொல்ற? ஒன்னும் புரியலை."

ஐ.சி.யூ வெளியே உன் பெற்றோர். உன் அப்பா எங்கள் வரவைப்பார்த்து முகம் திருப்பிக் கொண்டு வெளியேற உள் நுழைந்தேன்.

"அவளுக்கு செவ்வாய் தோஷம் அதான் கல்யாணம் பண்ணி வைக்க முடியாமப்போச்சு. அதை அவளும் புரிஞ்சிக்கிட்ட உடனே தான் நாங்க ஊரை விட்டு கிளம்பினோம். அவ வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. நேத்து உங்க பையனை பேங்கில பாத்ததா சொன்னாள். அவள் அண்ணன் குழந்தையோட வந்ததை சிவா தப்பா புரிஞ்சிக்கிட்டு இருப்பார்னு ராத்திரியெல்லாம் புலம்பினாள். காலையில எழுப்பப்போனா இப்படி மாத்திரை சாப்பிட்டுட்டு நினைவில்லாம கிடக்குறா." என் அம்மாவிடம் அழுதபடியே உன் அம்மா.

"மஞ்சு..." குரல் தழுதழுக்க கூப்பிட்டேன்.

மெல்ல கண்களைத் திறந்தவள். ஒரு கண்ணீர்த் துளியை பதிலாகத் தந்தாய். மெளனம் மட்டுமே பேசத்தொடங்கியது. எதையோ தேடிய உன் கண்கள் மெதுவாக மூட.

"மஞ்சு... மஞ்சு..." மெல்ல என் குரல் தேய்ந்தது. காதலுக்கு புரியும் அந்த மொழி காலனுக்கு புரியுமா? வெகு நேரம் சத்தம் கேட்காமல் உள்ளே வரும் எல்லோரும் நம் பிணங்களைத் தான் பார்ப்பார்கள்.

"உன்
இமைப்புகளின் எதிரொலியே
என்
இதயத்துடிப்புகள்."


தொலைவில் எங்கோ கேட்கிறது ஒரு பாடல்

"உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே........"

(பாடல் கேட்க‌)


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

உங்கள் கருத்துக்களை இந்த பதிவுக்கு கண்டிப்பாக விட்டுச்செல்லுங்கள். அவை என் அடுத்த கதைக்கு உதவும்.

நன்றி!!

ஊமையான கவிதைகள்

FLR0023

FLR0025

FLR0026

FLR0028

FLR0027


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.