திருப்பிக் கொடுக்க முடியுமா

உன்னில் காதல் படித்தேன்,
சிணுங்கலுக்கு வரியமைத்தேன்,
மெளனத்துக்கும் தலையசைத்தேன்.

கண் வழிபுகுந்து கனவுகளுக்கு
உயிர் கொடுத்தேன்,
கூந்தலுக்கு கல்லையும்
பூக்க வைத்தேன்.

இப்போதோ நீ இல்லை,
நானும் தான் இல்லை.

எனக்கு நீ வேண்டாமடி
நான் தான் வேண்டும்
திருப்பிக் கொடுக்க முடியுமா?

நனையவா குடை பிடித்தேன்?
உடைக்கவா சிலை வடித்தேன்?
மறக்கவா காதலித்தேன்?

எனக்கு நீ வேண்டாமடி
நான் தான் வேண்டும்
திருப்பிக் கொடுக்க முடியுமா?

என்னை...

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

0 கால்தடங்கள்: