ஸ்ரீயாகிய நான் 3 சோடி போட்டுக்குவோமா சோடி

ஸ்ரீயாகிய நான் 1

ஸ்ரீயாகிய நான் 2

எப்படியோ ஒரு வழியா +2 பரிச்சை முடிச்சிட்டேன். அப்புறம் என்டரன்ஸ்னு ஒன்னு எழுதனும்னு சொன்னாங்க. நமக்கு தான் பரிச்சை பயமே இல்லையே (ரிசல்ட் பயம் மட்டும் தான்) சரி கழுதை எழுதிட்டா போச்சுனு ரெடியானேன். என் அம்மாவுக்கு பையன் மெட்ராஸ்ல 'எக்ஸல்'ல படிச்சா பெரிய ஆளா வருவானு தோனிடுச்சு, அடுத்த வாரமே எக்ஸல் விஜயம். சும்மா சொல்ல கூடாதுங்க பெத்தவங்க எது பண்ணாலும் சரியா தான் இருக்கும். அட அட அட என்னா ஃபிகருங்க? போய் இறங்குனதுல இருந்து சைட் அடிக்க ஆரம்பிச்சது தான். நானா எதோ படிச்சிருந்தா கூட நல்ல மார்க் வாங்கி இருந்திருப்பேன் அங்க போனதனால ஊரை தான் சுத்தினேன. அப்புறம் கொஞ்சம் பயம் வந்து கோச்சிங் முடியிரத்துக்கு முன்னாடியே பஸ் ஏறிட்டேன். ஏதோ படிச்சு ஒரு காலேஜ்ல சீட்ட போட்டுட்டேன். தெய்வம்னு ஒன்னு இருக்குங்க அங்க போனாலுமா என்ன மாதிரியே ஆளுங்க இருப்பானுங்க?

ஒரு குருப்பா சேந்தோம் நான், குவா (குழந்தை மாதிரி), குடிகாரன் (நானும் தான் ஆனா அவனை செல்லமா அப்டி தான் சொல்லுவோம்), காட்டான் (கொஞ்சம் கோவக்காரன்), கரடி குட்டி (அவன் மூஞ்சி தவிர எல்லா இடத்துலயும் முடிங்க அதான், இன்னொருத்தன் இருக்கான் 'கரடி மாமா'னு அவனுக்கு கண்ணை தவிர எல்லா இடத்துலயும் முடி. சோ கன்பீஸ் ஆயிடாதீங்க). இன்னும் நிறைய பேர் இருக்கானுங்க லிஸ்டுல ஆனா நாங்க தான் முதல்ல ஒன்னு கூடுனோம். 5 பேரும் சேந்து என்ன அணுகுண்டா கண்டுபிக்க போறோம்? குட்டி செவுரா தான் ஆனோம். அதுலயும் ஒரு அழகு எங்களோட வார்டன், மனுசன் 8 மணிக்கு தான் எழுந்திருப்பாரு. முதல் நாள் காலேஜ் முடிஞ்சி எல்லாம் ஆஜர் ஆனோம். நான் சுவத்த பாத்து உக்காந்துகிட்டு கதை பேச ஆரம்பிச்சேன். ஒரு உணர்ச்சிவசத்துல "டேய் அவன் வார்டனாடா? 8.30 மணிக்கு என் கூட தான் வந்து பல் துளக்குறான். அவனுக்கு கீழ படிக்கிறவன் எவனாவது உருப்புடுவானா?"னு ஒரு ஸ்மால் கொஸ்டீன் தான் பண்ணேன் பின்னாடி வார்டன் நிக்கிறது தெரியாம. அது என்ன ரகசியமோ எப்பவுமே நான் மட்டும் தான் மாட்டுவேன். அவர் கூப்பிட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார் அதுல இருந்து ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் காலீல சியர்ஸ் சொல்லி தான் பல்லு துளக்குவோம். சேந்த முதல் நாளே டெளசர் (ஷார்ஸ்) போட கூடாது லுங்கி தான் கட்டணும்னு சொல்லிட்டானுங்க. எனக்கு அது பழக்கம் இல்லை சரி ரூம்ல இருக்கும் போது டெளசர்ல இருக்கலாம்னு நானும் மாட்டுனேன். கரண்ட்டு கட்டாயிடுச்சு வெளியில பாராபட் சுவத்துல உக்காந்திருந்தேன். இருட்டுல அக்கவுன்டன்ட் வந்ததை கவனிக்கலை. சுவத்துல அதுவும் டெளசர் போட்டுகிட்டு உக்காந்துகினு இருக்கியா உனக்கு எவ்ளோ எஸ்.கே டானு சொல்லி உக்காந்த இடத்துலயே அடிச்சாங்க (சுவத்துல இல்லைங்க சு... மறுபடியும் சென்சார் ப்ராப்ளம்). இப்படி தான் முதல் நாள் காலேஜுல போச்சு.

அந்த வார்டன் கிளம்பி போக வந்து சேந்தார் நம்ம புது வார்டன் - ஹீரோ "அல்லக்கை". அவன் சரியான் குடாக்குங்க. இஞ்சி தின்ன குரங்குனு கேள்வி பட்டிருப்பீங்க ஆனா அவன் இஞ்சி தின்ன குரங்குக்கு பேதி ஆனா மாதிரி இருப்பான். என்னாடா இவன் மரியாதை இல்லாம பேசுறானேனு தப்பா பீல் பண்ணாதீங்க அவன் ஒரு சில்லரை பையன்ங்க எங்க கிட்டயே புடிங்கி தின்னுவான். சரியான கிறுக்கன் எவ்ளோ ஓட்டுனாலும் தாங்குவான் ரொம்ப நல்லவன். ஒரு வருஷம் முழுக்க ஓட்டுனோம். அதுல சில மறக்க முடியாத ஓட்டல்கள் இங்கே:

1. பசங்க ஒரு தடவை அவன் ரூம்ல கதவு வழியா கொஞ்சம் தண்ணி ஊத்திட்டானுங்க. அப்புறம் கதவு தட்டினாங்க அவன் அந்த தண்ணியில வந்து நின்னான். "டேய் என்னடா ஈரமா இருக்கு தண்ணியா?"னு கேட்க. எல்லாம் சேந்து "அய்யய்யோ சார் தண்ணி இல்லை எவனோ "உஸ்கா" (அதாங்க ;) சென்சாருக்காக வேற ஸ்பெல்லிங்) போயிட்டான்"னு சொல்லிடானுங்க. பாவம் மூஞ்சிய பாக்கணுமே நொண்டி அடிச்சிகிட்டே ஓடுனான் பாத்ரூமுக்கு.

2. ஒரு தடவை உள்ள வைச்சு பூட்டிட்டானுங்க (அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா). இந்த மேனேஜ்மன்டுனு இருப்பானுங்க இல்ல அதுங்க எல்லாம் சேந்து பூட்டு போடுறா மாதிரி இருந்தா தானடா உள்ள வைச்சு பூட்டுறீங்கனு சொல்லி அதை கதவோட இருக்க லாக்கா மாத்திட்டானுங்க (அடடா இன்னாமா யோசனை பாத்தீங்களா மூளைய ரொம்ப சொறிஞ்சானுங்க போல). நாங்க தான் இன்சினியர் ஆச்சே ரொம்ப யோசிக்கலை அழகா அவன் உள்ள இருக்கும் போது அந்த சாவி ஓட்டையில பபுள் கம் வெச்சி அடைச்சுட்டானுங்க. அப்புறம் எப்டி வந்தானு தெரியல பாவம்.

3. அவன் ரூம் கதவுல போய் பெருசா "அல்லக்கை" அப்டினு எழுதிட்டானுங்க. அவன் என் கிட்ட வந்து "டேய் அல்லக்கைனா என்னடா"னு கேட்க நான் எவ்ளோ கேவலமா சொல்ல முடியுமோ அவ்ளோ கேவலமா எக்ஸ்ப்லெயின் பண்ணேன். கொஞ்சம் சோகமா ஆயிட்டாரு. "என் கதவுல யாரோ அப்டி எழுதிட்டானுங்க"னு சொல்லி பீல் பண்ணாரு. நான் "நீங்க என்ன சார் பண்ணீங்க"னு கேட்டேன். சிம்பிளா "அழிச்சிட்டேன்"னு மனுஷன் பதில் சொல்லிட்டாரு. "அதை எப்டி அழிச்சீங்க? அது பால் பாயிண்ட் பேனாவாச்சே!"னு சொல்லி தொலைக்க. "டேய் நீ தானா?"னு என் மேல பாய ஆரம்பிச்சுட்டார். கேணை வழக்கம் போல பொய் சொன்னதை நம்பிட்டான்.

இன்னும் நிறைய இருக்குங்க அவனை பத்தி ஆனா ரொம்ப மொக்கை போட்டுட்டேன்னு நினைக்குறேன் இப்போதைக்கு அப்பீட் ஆயிக்கிறேன். பசங்க கூட கொஞ்சம் டிஸ்கிஸ் பண்ணிட்டு அப்புறம் சொல்றேன் ஏன்னா எனக்கு ஞாபகம் இருக்குற மேட்டர் எல்லாம் சென்சார் விஷயங்கள் சோ அப்பாலீக்கா நல்ல மேட்டர்ஸ் சொல்றேன்.

ஸ்ரீயாகிய நான் 4

ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.

3 கால்தடங்கள்:

Kothai said...

ungala vida senior post la irundha pearabathu pola....

Kothai said...

ungaluku senior post la irundha aabathu pola....

ஸ்ரீ said...

//kothai said...

ungala vida senior post la irundha pearabathu pola....//


வாங்க கோதை. நானும் கொஞ்சம் நல்ல பையன் தான் மா நம்புங்க :)