நிரந்தர கர்பிணி

கோயிலுள்ளே பத்து ரூபாய்
போட்ட கை தான்
பிச்சைக்காரனுக்கு
ஒரு ரூபாய் தேடியது.

கோயில் காளையாகவே
பிறந்திருக்கலாம்
யோசனையில்
பிச்சைக்காரச் சிறுவன்.

அரியும் சிவனும்
ஒன்னென்று
புறியவே
ஒரு யுகமாச்சே!
அப்போ
மதநல்லினக்கம்?
சில ஜென்மங்கள்
கழித்து பேசுவோம்...

நிரந்திர
கர்பிணியாய்
கோயில் உண்டியல்,
வெளியே
பாலுக்கு கதறும்
ஏழைகள்.
கேட்கவில்லையா
உங்களுக்கு?

"கடவுள் முன் எல்லோரும் சமமா?"
சரி முதலில்
"கடவுள் எல்லோரும் சமமா?"
ஆமென்றால்
அய்யனாருக்கு மட்டும்
ஏன் 'அவுட் ஹவுஸ்'?

பொருள் வாங்கி,
அருள் தரும்
ஐந்தறிவு யானையை
மன்னிப்பேன்.
உன்னையல்ல....

அன்பே சிவம்...
-ஸ்ரீ.

0 கால்தடங்கள்: