அசைபோடுகிறேன்

நண்பர்களே!

ரொம்ப நாள் கழிச்சு நான் படித்த காலேஜ் பக்கம் போயிருந்தேன். பின் நோக்கி போகிற சுகமே தனி தான். முதல்ல போக‌ணுமானு தான் யோசித்தேன். நான் காதல் பழகிய அந்த அழகான உலகத்த மறுபடியும் பாக்க ஏதோ என்ன இழுத்துட்டு போயிடுச்சு. என்கிட்ட நல்லா பழகுனவங்களை மட்டும் பாத்துட்டு வந்துடலாம்னு போனா அங்க எல்லாரும் அவர் ரூம்ல தான் இருக்காங்க. என்ன உருப்பட மாட்டடானு திட்டுனவங்க தான் என்ன பார்த்து சந்தோஷப் பட்டாங்க. எங்கயோ படிச்ச ஞாபகம் "வெளியேறியது பறவை, கூண்டுக்கு விடுதலை.". ஆனா அந்த கூண்டுகள் எனக்கு கூடு கட்ட சொல்லித்தந்து இன்னும் கூண்டா இருக்கவே சந்தோஷப்படுதுங்க. என் பேரை 2 வருஷம் கழிச்சு கூட முக்கால் வாசி சரியா சொன்ன அந்த பேராசிரியை, ஆர்வமா என்ன பாத்த ஜூனியர் எல்லாம் "ஏன் இவ்ளோ நாள் போகாம இருந்தேன்னு என்னயே கேள்வி கேக்க வெச்சுது.". நீங்களும் ஒரு முறை போய் பாத்தாதான் நான் சொல்ற‌து புறியும். திரும்ப வர மனசில்லாம தான் வந்தேன். நியாபகங்கள் சுவை இப்போது புறிந்து போச்சு அதனால் ஒரு புது பகுதி ஆரம்பிக்க நினைக்கிறேன். பேரு தேடி சலிச்சு போச்சு. "Being Sri" அப்டினு வைக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா தமிழ்ல எழுதும் போது நம்ம பசங்க தப்பா படிக்க போறாங்களோ ஒரு பயம் அதனால "ஸ்ரீயாகிய நான்" அப்டினு அரம்பிக்க போறேன். என் வாழ்க்கையில நடந்த சில மறக்க முடியாதவை மட்டுமே இடம் பெறும். நீங்களும் ஒரு முறை போய் பாக்கலாமே...?

அசைபோடுகிறேன்...
-ஸ்ரீ.

0 கால்தடங்கள்: