பார் ரதி

இதயப் பூவமர்ந்து
உயிர்த்தேன் குடித்து
இமைச்சிறகடிக்கும்
கருப்பு வெள்ளை
வண்ணத்துப் பூச்சுகள்
‍உன் கண்கள்.

கருப்பு என்ன
ஒதுக்கப்பட்ட நிறமா?
அதில் பூக்களே இல்லை
ம்... ஒருவேளை,
உன் கூந்தலினும்
மணம் ஏற்ற முயன்று
தோற்றானோ நான்முகன்?

மேக அரிதாரம்
பூசியும் அழகில்
உனக்கு ஈடாகாமல்
வானம் அழுவதைத் தான்
மழை என்கிறதா உலகம்?

'எமக்குத் தொழில் கவிதை'
என்றான்
பாரதி
அவன் தொழிலாகவே வாழும்
நீ
பார் ரதி!!

மனதில் உனை விதைத்து
நீர் கொண்டு திரும்பும் முன்
விருட்சமாக சிரிக்கிறாய்.
கொணர்ந்த நீர் போதாமல்
உயிர் உருவி ஊற்ற‌
மறுகனம் போன்சாயாய்
மாறி சிலிர்க்கிறாய்.
ஏனடி இந்த சில்மிஷம்?
சில்மிஷியே!!!


காதல் அழிவதில்லை...
- ஸ்ரீ

0 கால்தடங்கள்: