வழக்கொழிந்த வார்த்தை

இலையுதிர் காலத்தால்
வற‌ண்டு போன போது
என் வாசலுக்கு
வசந்தம் கொண்டு வந்தாய்

கால்களைப் பிடுங்கிக்கொண்டு
சிறகுகள் தந்து
மனக்கூண்டினுள்
சிறை வைத்தாய்

உனக்குள்ளே நான்
கறைந்து போக‌
என் முகவரி
நீயாய் போனாய்

என் அணுக்களில்
குடியேறி
உயிரோடு
சடுகுடு ஆடினாய்

கண்ணீர்த் தேன்,
முத்தத் தீ ஊற்றி
நம் காதல்
செடி வளர்த்தாய்

பூப்பூக்கும்
நேரம் பார்த்து
காற்றோடு
மறைந்து போனாய்


இன்று
நீ இல்லாமல்

வழக்கொழிந்த வார்த்தையாய்
நான்
நினைவுகளின் கல்லறையாய்
என் இதயம்!!


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ

2 கால்தடங்கள்:

ச.பிரேம்குமார் said...

"வழக்கொழிந்த வார்த்தையாய்
நான்"

அருமையான‌ ஒப்பீடு

ஸ்ரீ said...

நன்றி ப்ரேம்!