காதல் வலை

பல நேரம் மருந்தானாலும்
சில நேரம் முட்களாக மாறி காயப்படுத்துவதால்
காதலுக்கு சரியான சின்னம் தான்
‍‍- ரோஜா.


உன் கூந்தலில் மல்லிகையாகும்
வரம் வேண்டாம்
நான் கேட்பது
உன் நிழலில் காலானாக‌
இருக்க அனுமதி மட்டுமே !


மேகமாய் என் வானில் வந்து
காதல் மழை தூவினாய்
வேர்கள் நனையாவிட்டாலும்
தாகம் அடங்கியதடி !


பின்னிய காதல் வலையில்
சிலந்திகளாய் - நாம்
பூச்சிகளாய் - நம் பெற்றோர் !


இறந்த பிறகு என்
கண்களை மூடிவிடாதீர்கள்
அவளை எப்போதும்
பார்த்துக்கொண்டிருக்கும்
வரம் வாங்கியுள்ளேன்.


கலைக்கப்படும் என்று தெரிந்தால்
குருவிகள் கூடு கட்டாது,
இடிக்கப்படும் என்று தெரிந்தால்
எறும்புகள் புற்றும் கட்டாது,
கேட்கப்படாது என்று தெரிந்தால்
குயில்கள் பாடாது,
வெட்டப்படும் என்று தெரிந்தால்
மரங்கள் வளராது,
ஏன்
உதிரும் என்று தெரிந்தால்
செடிகள் பூக்காது,
மறுக்கப்படும் என்று தெரிந்தும்
காதலித்தேனே
ஒரு வேளை நான் தான்
அஃறிணையோ ?


காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ

2 கால்தடங்கள்:

Unknown said...

nanba un kavidhaigalai padithal enaku kadhalika vendumendru thondrugiradhu

ஸ்ரீ said...

Nandri Balloo . Innum kadhalikkavillaya neengal? Sekiram arambiyungal. Kavalai venda kadhalukku vayadhu varambu illai.