பிரம்மனின் தவறு

சிதறிய என் பேனா மை வானமாய்
உதறிய உன் தாவணி வானவில்லாய்
எப்போதுமே
உன்னால் தானடி நான் அழகாய்!!



"இதயம் சுக்குநூறாக உடையட்டும்!"
ஆண்டவன் சபித்தாலும் கவலையில்லை
எல்லாத்துண்டிலும் நீ தானே இருப்பாய்
என் ஆயுள் கூடத்தான் செய்யும்.



உன் நினைவுகளை சுவாசிக்கும்
முத்தங்களில் பசியாறும்
இந்த வாழ்க்கையே போதும் !



பிரம்மன் செய்த‌
முதல் தவறு நீ!
பெண் மயில் உன்னை
ஆண் மயிலை விட‌
அழகாய் படைத்து விட்டானே!



உன் சிரிப்பினால் எறிந்து
மீண்டும் உன் மடியில்
மறு ஜென்மம் எடுக்கும்
நானும் ஃபினிக்ஸ் தான்.



காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ
‍‍

1 கால்தடங்கள்:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//
பிரம்மன் செய்த‌
முதல் தவறு நீ!
பெண் மயில் உன்னை
ஆண் மயிலை விட‌
அழகாய் படைத்து விட்டானே!
//
அட!! அருமை ஸ்ரீ