காதல் காலம் 4

ந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 4 முதல் பாகம் இதோ இங்கே.


மறுநாள் வந்த உன்னிடம் புதிதாய் வெட்கம் ஒட்டிக் கொண்டிருந்தது. ரோஜாவே அழகு ரோஜா மேல் பன்னீர்த்துளி பேரழகு. ரோஜாவா நீ? குறிஞ்சி! ரோஜா அன்றாடம் பார்க்கலாம் ஆனால் உன்னைப் பார்க்க 12 வருடம் காத்திருந்தேனே குறிஞ்சி தானடி நீ. உன் வெட்கம் தோய்ந்த சிரிப்பு என் காதலை, இப்போது நம் காதலை உறுதிப்படுத்தியது. மாலையில் பள்ளி முடிந்து நாம் இருவரும் மாந்தோப்பில்.

"எனக்கும் உன்னை பிடிக்கும்டா ஆனா நேத்திக்கு முறைச்சிட்டு போயிட்டேன்." என்றாய் அசடு வழிய. குழம்பிப்போன ஒரு வண்டு உன் தலையை வட்டமிட்டபடி துரத்தியது.

"அத அடிக்காதமா அது என்ன செய்யும் பாவம் இவ்ளோ பெரிய பூவப்பாத்திருக்காது இதுக்கு முன்னாடி."

"கடிக்க வந்தா சும்மாவா விடுறது?"

"சரி அப்போ அதுக்கு கொடுமையா ஒரு தண்டனை குடுப்போம். உன்னை ஒரு தடவை கடிக்க விடு அப்புறம் அது உடனே சக்கரை நோயில செத்துடும்."

"இங்க பாருடா யோசனை சொல்றாரு." சிரித்துக் கொண்டே நீ.

"யேய் போ! அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம்ல." சொல்லியபடி வண்டைத் துரத்தினேன்.

"எதுக்காம்.....?"

"வண்டத் தொரத்தத் தான் வேற எதுக்கு?". மறுபடி முளைத்தது வெட்கம்.

"எப்படா என்னை காதலிக்க ஆரம்பிச்ச?"

"முத்து வந்த நேரம் சிப்பிக்கு,
முத்தம் வந்த நேரம் உதட்டுக்கு,
கவிதை வந்த நேரம் கவிஞனுக்கு,
காதல் வந்த நேரம் எனக்கும்,
எப்படித் தெரியும்?"

"அப்பா! எப்பவுமே பேசிக்கிட்டே தான் இருப்பியா? வாய் வலிக்காதா உனக்கு?"

"நீ கண்ணால பண்றத நான் வாயால பண்றேன். உனக்கு கண்ணு வலிக்குதா என்ன?"

அப்போது கூட்டில் இருந்து தவறி வெளியே விழுந்த ஒரு கிளிப் பேடையை கையில் எடுத்தாய்.

"அய்யோ தெரியாம வெளியே விழுந்துட்டியா நீ?" என்றவாறே முத்தமிட்டாய் அதை. கூச்சத்தில் மூக்கு சிவந்தது அதற்கு.

"தெரியாமல் எல்லாம் இல்லை நீ கையில எடுப்பனு தெரிஞ்சேதான் விழுந்திருக்கும். இப்போ முத்தம் வேற குடுத்துட்டியா மீதி குஞ்சிகளும் பின்னாலயே கூட்ட விட்டு குதிக்கப் போது பாரு."

"எவ்ளோ அழகா இருக்கு பாறேன். இத வீட்டுக்கு கொண்டு போட்டா?"

"வேண்டாம்மா. நீ வீட்டுக்கு கொண்டு போக அது உன்னைப் பாத்து அம்மானும் நான் அந்த பக்கம் வந்தா அப்பானும் கூப்பிட்டுச்சுன்னா வம்பாயிடும்."

"சீ!"

ஒற்றை சிணுங்கலுக்கு ஒரு கோடி அர்த்தங்கள். இந்த முறை கொஞ்சம் அதிகம் வெட்கப்பட்டு விட்டாய் போலும், தோப்பில் உள்ள எல்லா மாமரங்களுமே பழுத்து விட்டன. மாம்பழம் பழுத்து பார்த்த கிளிகள் மாமரங்களே பழுத்ததால் அவசரக் கூட்டம் போட்டு நம்மை வாழ்த்தின.

காதல் காலம்‍‍‍ பாகம் 5


காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
‍‍-ஸ்ரீ

2 கால்தடங்கள்:

Unknown said...

truly proffesional da machan
i didnt expect such a perfection in u

ஸ்ரீ said...

Thanka a lot for visiting and for your comments Baloo. :)